மீறல்களுக்குப் பொறுப்புக்கூற இன்னும் உரிய நடவடிக்கை இல்லை – கனேடிய வெளிவிவகார அமைச்சர் கவலை!

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூற இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கவலை கொண்டுள்ளதாக கனேடிய வெளிவ்வகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார். கனடாவில் தஞ்சடைந்துள்ள சிறிலங்கா இராணுவ கப்டன் பிரியசாந்த,...

வொசிங்டனில் பிளேக்கை சந்திக்கும் சிறிலங்கா அதிபரின் முயற்சி தோல்வி!

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடன் மீளவும் நல்லுறவுகளை...

சிறிலங்கா காவல்துறையினர் ஆயுதங்களை எடுத்துச் செல்ல கோத்தாபய தடை!

சிறிலங்கா காவல்துறையினர், பணியின் போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்றும், பற்றன் பொல்லுகளை மாத்திரம் எடுத்துச் செல்லுமாறும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிவுறுத்தலை அவர், சிறிலங்கா காவல்துறை...

வெலிக்கடைச் சிறைக்கலவரத்தில் 27 பேர் பலி – இன்றும் 11 சடலங்கள் மீட்பு!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற கலவரத்தில், கொல்லப்பட்ட 11 பேரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து, இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர...

நவநீதம்பிள்ளை போட்ட புதிய குண்டு – சிறிலங்காவுக்கு அதிர்ச்சி!

உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தாலும், சிறிலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அத்துடன், சிறிலங்கா அகதிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பும் அவுஸ்ரேலியா புதிய கொள்கை தொடர்பாகவும்...

வடக்கு மாகாணசபைத் தேர்தல் விவகாரம் – அனைத்துலக அழுத்தங்களை நிராகரித்தார் மகிந்த!

வடக்கு மாகாணசபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய...

பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி சுட்டுக்கொலை!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் பரிதி நேற்றிரவு இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்த முகமூடி அணிந்த இருவர், கிழக்கு பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணியகத்துக்கு...

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம் – வீரவன்ச, சம்பிக்க சூளுரை!

வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் சூளுரைத்துள்ளனர். கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 13வது திருத்தம் நாட்டின்...

13வது திருத்தம் இல்லாது போயிருந்தால் அமெரிக்காவே உடைந்திருக்கும் – டலஸ் அழகப்பெரும!

அமெரிக்க அரசியலமைப்பில் 13வது திருத்தத்தைக் கொண்டு வந்திருக்காது போயிருந்தால், அந்த நாடு பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் என்று சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாகாணசபை முறைமை...

13வது திருத்தத்தை ஒழிக்கும் சிறிலங்காவின் முயற்சி – இந்தியா அதிர்ச்சி!

சிறிலங்காவில் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். எனினும், சரியான நேத்தில் இது குறித்து பதிலளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர் ஆங்கில ஊடகம்...