யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்; இடைநிறுத்தியது நிர்வாகம்
இதில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் குறித்த நினைவாலயத்தை அமைக்குமாறு உயர்மட்டத்தினரால் மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட, அதற்கு இணக்கம் தெரிவித்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவாலய பணிகளை தற்போதுள்ள நிலையுடன் இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது.
இதனையதூத்து மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவாலய கட்டுமானப்பணிகள் நேற்று மாலையுடன் இடைநிறுத்தப்பட்டது.
ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்; 27 பேருக்கு நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பு
பாடசாலைக்கு காணியை பெற்றகொடுக்க களத்தில் இறங்கிய அமைச்சர்
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன்இ பூநகரி முழங்காவில் பகுதி பாடசாலைகளுக்கு நேற்று முன்தினம் (23) கள ஆய்வுப்பணி பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந்த கள ஆய்வுப்பணி மூலம் முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு தேவையான காணி தொடர்பான வியங்கள் ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டன.
இதன் போது காணி ஆணையாளரும் பூநகரி பிரதேச செயலகத்தின் காணிப்பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் காணி அதிகாரிகளும் அழைக்கப்பட்டு காணிப்பிரச்சினை தொடர்பான விளக்கங்கள் கோரப்பட்துடன் எதிர்காலத்தில் நீச்சல் தடாகம்இஉள்ளக விளையாட்டரங்குஇதொழிநுற்ப ஆய்வுகூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் பாடசாலைக்கு காணிகள் அவசியம் வேண்டும் என்ற விடயம் கருத்தில் கொள்ளப்பட்டு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 30 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தங்குவதற்கும் மேலதிக ஆசிரியர்கள் தங்கும் விடுதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை போர் காரணமாக இரணை தீவில் இருந்து இடம்பெயர்ந்து இரணைமாதா நகரில் இயங்கிக்கொண்டிருக்கும் இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் வித்தியாலயத்திற்கும் நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கும் சென்றிருந்த மேற்படி குழுவினர் அவ்விரு பாடசாலைகளுக்கும் தேவையான விடயங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இக்கள ஆய்வுப்பணி பயணத்தில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்இகிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர்இபூநகரிகோட்டக்கல்வி அதிகாரிஇ வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள்இபூநகரி பிரதேசசெயலக காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதி , பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில்
கடத்தல்களால் பதற்றம்; யாழில் சிறுமி, வன்னியில் சிறுவன்
கண்மூடித்தனமாக கொலைசெய்ய அதிரடிப்படை அதிகாரிகளிடமிருந்தே கட்டளை வரும்- சிங்களவர் வாக்குமூலம்
அதில் சாட்சியங்கள், வெள்ளைவான் கடத்தல் அணியின் வேலையானது ஒரு பயங்கரமூட்டும் திரைப்படம் போலவே இருந்ததாகவும் ஆனால் அது சாதாரண வாழ்க்கைமுறைபோல் மாறியிருந்தததாகவும் வன்முறை, ஊழல், பயம், கோபம் மற்றும் வெறுப்பு என்பன தங்களைச் சூழ எப்பவும் இருந்தது என தெரிவித்துள்ளதாக குறிப்படப்படுள்ளது.
மேலும், கிழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கண்மூடித்தனமாக கொல்லுதல், மறைமுக கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அனுமதித்தல் இவற்றுக்கான கட்டளைகள் அனைத்தும் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் சிலரிடமிருந்தே வரும் என சாட்சியங்கள் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்படுள்ளது.
குறித்த சாட்சியங்கள் கட்டளை அதிகாரியின் பெயர்களையும் புகைப்படங்களையும் சித்திரவதைக்கூடங்களின் வரை படங்களையும் ITJP யிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.நா.வின் இறுக்கமாக மீளாய்வு மற்றும் சோதனைகள் இல்லாமல் இலங்கையின் விசேட அதிரடிப்படையினரை ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கான பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
ITJP ஆனது ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றுவதில் இருந்து தடைசெய்யப்படவேண்டும் என நம்பப்பபடும் 50 மேற்பட்ட விசேட அதிரடிப்படையினரினரின் பெயர்களைக் கொண்ட இரகசிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிக்கையினை பார்வையிட எங்கே அழுத்தவும் https://t.co/knqQaQrRuV
நிலம் மீட்கும் பணிக்காக படகேறிய மக்கள்
மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்தனர் தாக்குதல்; மதுபோதையில் இருந்ததாகவும் குற்றசாட்டு – வவுனியாவில் சம்பவம்
தமிழ் மக்களின் மனிதநேயத்தை நன்கு உணர்ந்துள்ளேன்-வட மாகாண ஆளுநர்
தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ் மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன்.
வடமாகாணத்திற்கு நான் ஆளுநராக கடமைக்கு வரும்போது என்னுடய மனைவி அங்கே போகவேண்டாம் என்று சொல்லி அழுதார். நான் இறக்க நேரிடும் என்று கூறினார். இன்று அவரும் இங்கே வடக்கு மாகாணத்திற்கு வந்திருக்கின்றார். அவருக்கும் வடக்கு தமிழ் மக்களின் மனிதநேயம் நன்றாக புரிந்துவிட்டது.
கடந்த வருடங்களை விட மேலும் மேலும் இந்த வட மாகாண மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்திருக்கின்றேன்.
நான் வயது முதிர்ந்தவன் கவிஞர் கண்ணதாசன் கூறியதைப் போன்று “வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ” என்றதைபோன்று கடைசியில் வடமாகாண தமிழ் மக்களுக்காக என் உயிரையும் கொடுத்து சேவையாற்ற இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அம்பலவாணர் கலையரங்கினை கட்டுவதற்காக கனடா, பிரித்தானியா, ஆஸ்ரேலியா, ஜேர்மனி போன்ற பல நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பணத்தினை பலர் நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்கள். இதனை பார்க்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை என தோன்றுகின்றது.
இங்குள்ள அரசியல் தலைமைகள் தமது வாய்களை திறந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் ஒரு டொலரை மாதம் ஒன்றுக்கு அனுப்புங்கள் என்று கேட்பது கிடையாது. நிச்சயமாக அவர்கள் கேட்பார்களே ஆனால் அவ்வாறு ஒரு பணத்தினை புலம்பெயர் தமிழர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இந்த நாட்டில் ஓரிரு நாட்களில் அரசியல் தலைவர்கள் ஆகவேண்டுமானால் ஒரு முறையிருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாம், மதவாதம் இவற்றில் ஒன்றினை எடுத்துக்கொண்டு பேசினால் ஓர் இரு நாட்களில் தலைவராக முடியும்.
இதனை மக்களாகிய நாம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழ்வதற்கு உரிய வழிகளை தேடிக்கொண்டு வாழ வேண்டும். அதற்காக நான் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.
இராணுவத்தினர் வைத்தியசாலையில்
பம்பைமடு இராணுவ முகாமில் இன்று (22) காலை இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இராணுவத்தினருக்குத் திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 14 இராணுவ வீரர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டனர்.
அத்துடன் மேலும் பல இராணுவத்தினருக்கு, பம்பைமடு இராணுவ முகாமில் முதலுதவிச் சிகிச்சையளிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகின்றது.




































