இலங்கையில் இடம்பெறும் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையின் அங்கமான கலாச்சார அழிப்பை முறியடித்து, எமது மொழியையும், பாரம்பரிய கலைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கத்தில், புலம்பெயர் தமிழர்களின் முயற்சியால் பிரித்தானிய அரசு தை மாதத்தினை “தமிழர் மரபுத் திங்கள்” என அண்மையில் பிரகடனப்படுத்தியது யாவரும் அறிந்ததே. இதனை கொண்டாடும் முகமாக வருடம் தோறும் தைமாதம் உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு பகுதிகளில் மரபுத்திங்கள் விழா அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.01.2025) கிங்ஸ்டன் நகரசபையின் ஆதரவுடன், கிங்ஸ்டன் தமிழ்ப் பாரம்பரியக் குழுவினால் இலண்டன் நியூ மால்டனில் அமைந்துள்ள றிச்சார்ட் சல்லோனர் பாடசாலையில் (Richard Challoner School, Manor Dr N, New Malden, London) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழர் மரபுத்திங்கள் விழா சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறியது.
இக்கிங்ஸ்டன் தமிழ்ப் பாரம்பரியக் குழுவில் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD), தமிழ் தகவல் நடுவம் (TIC), ITC கிங்ஸ்டன் தமிழ் கல்விக்கூடம் மற்றும் சரே தமிழ் கல்விக்கூடம் ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்பட்டன.
இதன் சிறப்பு விருந்தினராக, பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் டெமேகிரடிக் கட்சியின் தலைவருமான, அதிமதிப்புக்குரிய சேர் எட் டேவி (Rt. Hon. Sir. Ed Davey) அவர்கள் மற்றும் நகர முதல்வர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் ஆரம்பமாக, மகா பண்டிதன் என்று போற்றப்படுகின்ற பத்து தலை கொண்ட தமிழ் அரசன் இராவணன் போல் வேடம் தரித்து ஒருவர் முன்னே செல்ல தமிழர்களாகிய நமது பாரம்பரிய இசைவாத்தியங்களுடன் (நாதஸ்வரம், தவில், தம்பட்டம், பறை, கொம்பு, குழல) மங்கள இசை முழங்க பாரம்பரிய நடனக்கலைகளுடனும் (கரகம், காவடி, புலியாட்டம்) நமது கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முகமாக அழகான பெண் ஒருத்தி கையில் தீச்சட்டி ஏந்திவர விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு பொங்கல் நிகழ்வானது இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து மேடையினை மங்கள இசைகள் (நாதஸ்வரம், தவில்) அலங்கரிக்க ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகளானது ஆரம்பமானது. முதல் நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கவுன்சிலர் தயாளன் (Councillor Thayalan)அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் உரை இடம்பெற்றது.
தொடர்ந்து கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலை மாணவர்களால் புராணக்கதையுடன் கூடிய பரதநாட்டிய நடனமானது கண்ணுக்கு இனிமை தரும் வகையில் இடம்பெற்றது. கறோ தமிழ்ப் பாடசாலை சின்னஞ்சிறு சிறுமிகளால் சிறப்பான பரதநாட்டிய நடமானது வழங்கப்பட்டது. தொடர்ந்து தவில் மற்றும் பறை இசை வாத்தியத்துடனான நடனம் இடம்பெற்றது அது பார்வையாளர்களிடையே உற்சாகம் தரும் வகையில் அமைந்தது. கலைக்கு வயது தடை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் குழுவினரால் அழகான நடமானது வழங்கப்பட்டது.
தொடர்ந்து நமது மனதுக்கு மிகவும் நெருக்கமான காத்தவராயன் கூத்தின் ஒரு பகுதி, செல்வி வர்ணவி தவகணேஸ் அவர்களால் வழங்கப்பட்டது. கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலை மாணவர்களால் மற்றுமொரு நடனமானது வழங்கப்பட்டது. தொடர்ந்து மெய்வெளி நாடக கலைஞர்களால் தமிழையும் அதன் மரபையும் ஒன்றிணைக்கும் முகமாக “வேரின் குரல்” எனும் தலைப்பில் கிராமிய நடமானது வழங்கப்பட்டது. அதில் தற்காலத்தில் வாழும் முதியவர்கள் தமிழ் மற்றும் அதன் பண்பாடு அழிந்து போவதை கண்டு அஞ்சும் தன்மையையும் தற்கால இளையோர்களின் வாழ்க்கை முறையையும் எடுத்து காட்டும் வகையிலும் ஈழத்தமிழர்களின் வலியினையும் சுமந்து அமைந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொடர்ந்து வைத்தியர் தேவா நாதன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வானது சிறப்பாக நிறைவுபெற்றது.
இந் நிகழ்வினை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடியிருந்தார்கள்.
தமிழர் பண்பாடு அழகான ஒழுக்கத்தின் அடையாளம். தமிழர்களின் உணவு ஆரோக்கியத்தின் அடித்தளம். “அறம், பொருள், இன்பம்” எனும் மூன்று சொல்லில் வாழ்க்கையை சொன்ன செம்மொழி அதனால் தான் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உயிர்ப்போடு இருக்கின்றது அதுவே அதன் பெருமை. தமிழ் மரபை காக்க பழைய காலத்துக்கு போக வேண்டியதில்லை. தமிழ் பேசினாலே போதும். தமிழை நேசித்தாலே போதும். தமிழ் மரபை நம் அன்றாட வாழ்க்கையில் சிறிதாவது வாழ்ந்தாலே போதும். மரபு பாரமாக அல்லாமல் பெருமையாக இருக்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தின விழா 2025, 13.12.2025, சனிக்கிழமை அன்று இலண்டனில் நடைபெற்றது.
1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் உலகப்பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையிலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்கவும் தமிழ் தகவல் நடுவத்தினால் (TIC)ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான (2025) மனித உரிமைகள் நிகழ்வு இலண்டன் Punjabi Centre, 293-297, Ley Street, Ilford இல் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக ரெட்பிரிட்ஜின் பிரதி மேஜர், வணக்கத்துக்குரிய கவுன்சிலர் ஜோ ஹெஹிர் (The Worshipful the Deputy Mayor of Redbridge Councillor. Joe Hehir) அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கவுன்சிலர் முஷ்டாக் அகமது (Councillor Mustaq Ahmed), கவுன்சிலர் சன்னி பெரார் (Councillor Sunny Brar),கவுன்சிலர் அலெக்ஸ் ஹோல்ம்ஸ் (Councillor Alex Holmes), கவுன்சிலர் தன்வீர் கான் (Councillor Tanweer Khan), கவுன்சிலர் ஃபோய்சூர் ரஹ்மான் (Councillor Foyzur Rahman), கவுன்சிலர் கிரஹம் வில்லியம்ஸ் (Councillor Graham Williams, Cabinet Member for Regeneration), கவுன்சிலர் பரம் நந்தா (Councillor Param Nandha, Vice Chair: North Cheam, Stonecot and Worcester Park Local Committee) ஆகியோரும், சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு பேச்சாளராக, மூத்த பத்திரிகையாளரும் தமிழ்நெட்டின் நிறுவனருமான திரு. ஜெயா கோபிநாத் (Mr Jeya Kopinath, Senior Journalist, Founder Editor of TamilNet) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக TIC இன் நிறுவனர்களில் ஒருவரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அமரர் வைரமுத்து வரதகுமார் அவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நிகழ்விற்கு ஒளியூட்டும் வகையில் அதிதிகளால் மங்கள விளக்கேற்றி நிகழ்வானது இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் துணிச்சலுடன் போராடியவர்களுக்காக அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களை நினைவுகூரும் முகமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலியினை தொடர்ந்து வசந்தகுமாரி சந்திரபாலன் மற்றும் வாகீசன் தங்கவேல் அவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனமாக மெய்வெளி நாடக கலைஞர்களால் தமிழ் கலாச்சார முறையி்ல் “கூத்து வணக்கம்” வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு உரை TIC இயக்குனர் குழுமத்தின் தலைவரும் TIC இன் மூத்த உறுப்பினருமான திரு வி. ஜே. போஸ் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் மற்றுமொரு அங்கமாக TIC யின் வரலாறு மற்றும் தமிழர் பாரம்பரிய அருங்காட்சியகம் நிறுவுதல் தொடர்பான செயற்திட்ட ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. தமிழர் கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் TIC யின் செயற்திட்ட இலக்கு தொடர்பான ஒரு பார்வையாக இது அமைந்திருந்தது.
தொடர்ந்து முதலாவது விருந்தினர் உரையானது பிரதம அதிதியாக வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த ரெட்பிரிட்ஜின் பிரதி மேஜர், வணக்கத்துக்குரிய கவுன்சிலர் ஜோ ஹெஹிர் அவர்களால் நிகழ்தப்பட்டது. அவர் தனது உரையின்போது இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக நடைபெற்றது மற்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனப்படுகொலையே என்று பிரகடனம் செய்ததுடன், இதற்கு நீதி வழங்கும் பொறுப்பு பிரித்தானியாவுக்கு உள்ளது என்றும் பதிவுசெய்தார். தொடர்ந்து அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு TIC இன் இயக்குனர் குழுமத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பேச்சாளர் உரையானது மூத்த பத்திரிகையாளரும் தமிழ்நெட் இணையத்தின் நிறுவனருமான திரு.ஜெயா கோபிநாத் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அவர் தனது உரையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிரூபிப்பதற்கும் அதற்கான நீதிதேடுவதற்கான அடுத்த கட்ட படிமுறைகளையும் தெளிவாக முன்வைத்தார்.
அதனைத்தொடர்ந்து Red Panda Entertainment Agency, இனால் ஆபிரிக்கா கலாச்சார நடனமானது இடம்பெற்றது அந் நடனமானது பார்வையார்களை உற்சாகப்பத்தும் வகையில் அமைந்திருந்தது.
அதனைத்தொடர்ந்து TIC நிறுவுனர்களில் ஒருவரும், நிறைவேற் றுப் பணிப்பாளருமான மறைந்த வரதகுமார் ஞாபகார்த்த விருது இவ்வாண்டு மாமனிதர் தாரகி சிவராம் அவர்களுக்கு அவரின் துணிகர ஊடகசேவைக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை அவரின் குடும்ப சார்பாக திரு. ஜெயா கோபிநாத் அவர்கள் பெற்றுக் கொண்டார். அத்துடன் அவர் மாமனிதர் தாரகி சிவராம் அவர்கள் பற்றிய நினைவுரையையும் வழங்கி, அவர் பற்றிய பல விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இவ்வாண்டுக்கான முதலாவது மனித உரிமைகள் விருதானது பொது மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் செல்வி சாந்தி சிவகுமரன் (Shanthi Sivakumaran, Barrister, Specialised in Public and Human rights and international law) அவர்களை செல்வி சௌமியா மாதூசன் அறிமுகப்படுத்த தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனர்கள் அவருக்கான விருதினை வழங்கி கௌரவித்தனர். அச்சந்தர்ப்பத்தில் அவர் மனித உரிமைகள் தொடர்பான பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது மனித உரிமைகள் விருதானது மூத்த வழக்கறிஞரும் பொதுநல சட்ட மையத்தின் (PILC) நிறுவனருமான ஃபவுல் ஹெரோன் (Paul Heron, Senior Lawyer and Founder of the Public Interest Law Centre (PILC) அவர்களை செல்வி சௌமியா மாதூசன் அறிமுகப்படுத்த தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனர்கள் அவருக்கான விருதினையும் வழங்கி கௌரவித்தனர். இவர்கள் இருவரும் இலண்டனில் போராட்டம் செய்த தமிழர்களுக்கு கழுத்துவெட்டும் சமிக்கை காட்டி மிரட்டிய பிரிகேடியர் பிரிங்க பெர்ணாண்டோக்கு எதிரான வழக்கு மற்றும் விடுதலைப்புலிகள் மீதான தடை வழக்கு என்பவற்றை நடத்தியவர்கள் என்பதோடு, பிரித்தானிய கூலிப்படையாகிய “கினிமினி” இலங்கையில் 1980 காலப்பகுதியில் இழைத்த யுத்தக்குற்றங்களுக்கு நீதிகோரும் வழங்கும் வழக்கில் TICக்கு ஆலோசனை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து அரங்கத்தை அலங்கரிக்கும் முகமாகவும் ஒரு மனிதனின் உரிமைகள் என்ன என்பதனையும் அது பறிக்கப்பட்டால் படும் வேதனையையும் சிறந்த முறையில் ஒரு நாடகமாக மெய்வெளி நாடக கலைஞர்களால் “அடைய முடியாத ஒளி” (Unreachable Ligh) எனும் தலைப்பில் நாடகமானது அரங்கேற்றி வைக்கப்பட்டது. அந்நாடகமானது பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக்கியது மட்டுமன்றி அனைவராலும் எழுந்து நின்று கரகோஷம் கொண்டு பாராட்டப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் பன்நெடுங்கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசை வாகீசன் தலைமையிலான குழுவினால் இசைக்கப்பட்டது.
அத்துடன் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஏனைய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் தகவல் நடுவ தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினை செல்வன் மதுசங்கர் கெங்கேஸ்வரன் மற்றும் மகிஷா வரதராசா ஆகியோர் சிறந்த முறையில் தொகுத்து வழங்கினர்.
இந் நிகழ்வின் மூலம் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் அதிகரித்தது. மனித உரிமைகள் அனைவராலும் மதிக்கப்படும் போது, சமத்துவமும் அமைதியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து பதிவுசெய்யப்பட்டது.
Marking Tamil National Heroes’ Day and International Human Rights Day, a petition was today submitted to the British Prime Minister, Sir Keir Starmer, calling for justice for the genocide and grave human rights violations committed against the Tamil people by the Sri Lankan state.
The petition urges the United Kingdom to formally recognise the Tamil genocide, impose sanctions on those responsible for war crimes, and take concrete and decisive measures to ensure accountability and justice.
The petition submission was organised by the International Centre for the Prevention and Prosecution of Genocide (ICPPG). It was signed by survivors of systematic torture and sexual violence perpetrated by the Sri Lankan military, families of forcibly disappeared persons, and volunteers and activists of ICPPG.
The petition was formally handed over by victims and ICPPG activists Mathusankar Gengeshwaran, Arangan Jeyakumar, Vidushan Markandu, Abinash Thileepan, Gajanand Sundaralingam, and Logatharshi Sooriyakandhan.
Key Demands of the Petition
The petition makes the following principal demands:
Formal recognition of the genocide committed against the Tamil people.
Support for international and independent justice mechanisms, including referral to the International Criminal Court (ICC) or the establishment of a special international tribunal to prosecute those responsible for international crimes.
British leadership in pressing for a political solution under international supervision that respects the Tamil people’s rights to self-determination, equality, and security.
Acknowledgement of Britain’s historical responsibility in creating the political and constitutional conditions that enabled these injustices against the Eelam Tamil people, and the adoption of corrective measures to address this legacy.
The petition also welcomes and commends the recent sanctions imposed by the British government on certain Sri Lankan military officials, recognising these as the result of sustained advocacy over many years by ICPPG, in collaboration with international organisations such as the International Truth and Justice Project (ITJP), Sri Lanka Campaign for Peace and Justice, and Redress, as well as political groups including British Tamil Conservatives (BTC) and Tamils for Labour (TFL), together with victims and survivors.
However, the petition strongly emphasises that many key perpetrators of war crimes and crimes against humanity remain unsanctioned, and calls for urgent and further action to ensure comprehensive accountability.
மாவீரர் நாள் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டது . இந்த மனு தமிழினப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கவும், போர்க்குற்றவாளிகளுக்கு தடைகள் விதிக்கவும், நீதி நிலைநிறுத்துவதற்கான திடமான நடவடிக்கைகள் எடுக்கவும் பிரித்தானியாவை வலியுறுத்துகிறது.
இந்த மனு சமர்ப்பிப்பு நிகழ்ச்சி, இனப்படுகொலைத் தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வதேச மையம் (ICPPG) இனால் ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை இராணுவம் மேற்கொண்ட திட்டமிட்ட சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளில் உயிர்தப்பியவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், மற்றும் ICPPG யின் தொண்டர்கள்ள ஆகியோர் இந்த மனுவில் கையொப்பமிட்டிருந்தனர்.
இந்த மனுவை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ICPPG ன் செயற்பாட்டாளர்களான மதுசங்கர் கெங்கேஸ்வரன், ஆரங்கன் ஜெயக்குமார், விதுஷன் மார்க்கண்டு, அபினாஷ் திலீபன், கஜானந்த் சுந்தரலிங்கம் மற்றும் லோகதர்ஷி சூரியகாந்த் ஆகியோர் கையளித்தனர்.
மனுவின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
தமிழ் மக்களின் மீது நடைபெற்ற இனப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைத்தல் அல்லது ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தை (Special Tribunal) நிறுவுதல் உள்ளிட்ட சர்வதேச மற்றும் சுயாதீன நீதி வழிமுறைகளை ஆதரிக்கவேண்டும் .
தமிழர்களின்சுயாதீனம் , சமத்துவம் மற்றும் பாதுகாப்பு உரிமைகளை மதிக்கும் வகையில், சர்வதேச கண்காணிப்பில் உள்ள அரசியல் தீர்வை உறுதி செய்ய பிரித்தானியா வலியுறுத்த வேண்டும்.
இந்த அநீதிகளைஇலங்கைஅரசுஈழத்தமிழ்மக்களுக்குஇழைக்கஏதுவான அரசியல் அமைப்பு சூழலை உருவாக்கியதில் பிரித்தானியாவின் வரலாற்றுப் பங்கு இருப்பதைக் கவனத்தில் கொண்டு, அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ITJP, Sri Lanka Campaign for Peace and Justice, Redress ஆகிய சர்வதேச அமைப்புக்கள், British Tamil Conservative (BTC), Tamils For Labour (TFL) மற்றும் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து பல வருடங்களாக ICPPG மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவாக அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் சில இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு விதித்துள்ள தடைகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளதுன், பல முக்கிய போர்க் குற்றவாளிகளுக்கு இன்னும் தடை விதிக்கப்பட வேண்யிருப்பதை வலியுறுத்தி, உடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவ் மனுவில் கோரப்பட்டுள்ளது .
உலகலாவிய ரீதியில் மாவீரர் தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் (UK) இந்நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் நகரில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்திலலும் பிரித்தானிய மத்திய லண்டனில் உள்ள Excel அரங்கிலும் மாவீரர் நாள் நினைவுகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவினர்கள் சங்கம் பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவு நாளினையொட்டி பிரித்தானிய பிரதமர் கீர்ஸ்டாமருக்கு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கான நீதியினை வழங்கக்கோரியும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்க்ஷ , கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஏனைய தமிழ் மக்களுக்கு எதிரான அநீதியிழைத்தவர்களுக்கான தடையினை நீடிக்குமாறும் சர்வதேச விசாரணையை ஆதரிக்கும் விடயங்களான ஐ.சி.சி பரிந்துரை மற்றும் ஐ.நா விசாரணையை ஆதரிக்க ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை நீதி மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யக்கோரியும் மனு கையளிக்கப்பட்டது .
இந்த மனுவை இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவினர்கள் சங்கம் – ஐக்கிய ராஜ்ஜியம் (AEREDSL-UK) இனால் ஏற்பாடு செய்யப்பட்டபடி சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் (AEREDSL-UK) ன் உறுப்பினர்கள் என கையொப்பமிடப்பட்ட குறித்த மனுவினை அனுசன் பாலசுப்ரமணியம் , ஆரங்கன் ஜெயக்குமார் , பவசுதன் உதயராசா , விதுசன் கணேச மூர்த்தி , மேகலக்சன் சந்திர பர்மன் , நிலானி சந்திர பர்மன் , ஆகிய செயற்பாட்டாளர்கள் கையளித்திருந்தனர்
மனுவின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு
1. மகிந்தராஜபக்க்ஷ , கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஏனைய தமிழ் மக்களுக்கெதிரான அநீதியிழைத்தவர்களுக்கான தடையை ஐக்கியராஜ்ஜியம் நீடிக்க வேண்டும்.
2. சர்வதேச விசாரணையை ஆதரிக்கும் விடயங்களான ஐ.சி.சி பரிந்துரை மற்றும் ஐ.நா விசாரணையை மேற்கொள்ள ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
3.பாதிக்கப்ட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உண்மை , நீதி மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் .
மனுவில் மேலும் பிரித்தானிய அரசாங்கம் ஏற்கனவே சில இலங்கை அதிகாரிகளுக்கு விதித்துள்ள தடைகளுக்கும் அண்மையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கான தடை விதித்தமை குறித்தான பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல அநீதியிழைத்த முக்கிய தலைவர்கள் இன்னும் தண்டனைக்கு உட்படுத்தப்படாத நிலையில் விரிவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரப்பட்டது.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவினர் சங்கம் ஐக்கிய இராச்சியம் (AEREDSL-UK) இதுவரை ஐ.நா மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு ஆதாரங்களை வழங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முக்கய முயற்சியாக கருதப்படுகிறது .
பல தசாப்தங்களாக நீடித்த வன்முறை மற்றும் தண்டனையின்மைச் சுழற்சிகளில் இருந்து விடுபட இலங்கைக்கு “வரலாற்று வாய்ப்பு” கிடைத்துள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மனித உரிமைகள் பேரவையில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் போது வலியுறுத்தினார்.
இந்த அறிக்கை பொறுப்புக்கூறல், நீதி, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவமயமாக்கலின் முடிவு, மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் தீவிர பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான அவசர நடவடிக்கைகளைக் கோருகிறது. மேலும், இலங்கையில் பெரும் மனித உரிமை மீறல்களுக்கு நம்பத்தகுந்த வகையில் தொடர்புடையவர்களை விசாரிக்கவும், சர்வதேச சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்கவும், பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆராயவும் சர்வதேச சமூகத்தை அழைக்கிறது.
உயர் ஆணையாளர் ஆற்றிய முழு உரை பின்வருகிறது :
பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் வன்முறை மற்றும் தண்டனையின்மைச் சுழற்சிகளில் இருந்து விடுபட்டு, மீள்வதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பம் இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளது. நாடு முழுவதிலுமிருந்து மாற்றத்தை உருவாக்கும் சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக அரசாங்கத்திற்கு தெளிவான ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். எனது அண்மைய விஜயத்தின் போது, நாட்டின் தலைவர்கள் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு ஒரு புதிய தீர்வை உறுதியளித்தார்கள். இந்த அணுகுமுறையானது உறுதியான நடவடிக்கைக்கான ஒருமித்த, காலவரையறை கொண்ட திட்டமாக மாறுவது இன்றியமையாதது.
நான் இன்று சமர்ப்பிக்கும் இந்த அறிக்கை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்குதல், அடிப்படை சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள், தலைமுறை தலைமுறையாக அரசியலை நச்சுத்தன்மை ஆக்கிய பாகுபாடு மற்றும் பிரிவினையை நீக்குதல் ஆகிய முக்கிய விடயங்களை முன்வைக்கிறது. திரு. ஜனாதிபதி அவர்களே, மாண்புமிகு உறுப்பினர்களே, முதன்மையானது, எனது அறிக்கை, குணப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கு அவசியமான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானமான நடவடிக்கையை வலியுறுத்துகிறது.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், இனப்பாகுபாடு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை நான் வரவேற்கிறேன். எனது விஜயத்தின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான துன்பங்களை நான் கண்டேன். சாமி சனா சமானியில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில், தங்கள் நேசிப்பவரை இழந்த துயரத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன். தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், 30 ஆண்டுகள் கடந்தும் தனது கணவரைத் தேடிக்கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார்.
நம்பிக்கையை மீட்டெடுக்க, சுயாதீனமான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைகள் மிகவும் அவசியம். மோதலுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் ஆழமான களங்கத்தை ஏற்படுத்துவதாகவும், பல பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் கைவிடப்பட்டதாக உணருவதாகவும் எனது அறிக்கை குறிப்பிடுகிறது. தண்டனையின்மை என்பது வன்முறையின் இரண்டாவது வடிவம். இது தீங்கு விளைவிக்கும் சுழற்சியை தொடரச் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களின் குரல்கள் தான் பொறுப்புக்கூறல், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.
இதற்காக, உள்நாட்டுப் போர் உட்பட அனைத்து மீறல்களும் துஷ்பிரயோகங்களும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள், அரசும் அதன் பாதுகாப்புப் படைகளும் பொறுப்பை ஏற்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதே சமயம், புலிகள் போன்ற அரச சார்பற்ற ஆயுதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்களும் குற்றங்களும் ஏற்படுத்திய தொடர்ச்சியான பாதிப்புகளையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். உண்மைகள் குறித்து ஒரு பகிரப்பட்ட புரிதலும், நீதி வழங்கப்படுகிறது என்பதில் ஒரு பொது நம்பிக்கையும் இருக்க வேண்டும். இந்தக் கருத்தில், ஜனாதிபதியின் அறிக்கைகளையும், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் நான் வரவேற்கிறேன்.
இரண்டாவது, இலங்கை ஆழமான அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த கால அவலங்கள் மீண்டும் நிகழாது என்பதை உறுதிப்படுத்த இது மிகவும் முக்கியம். சுதந்திரமான புலனாய்வாளர்களுடன் கூடிய ஒரு சுயாதீன அரசு வழக்குரைஞர் அலுவலகத்தை அமைக்க அரசாங்கம் எடுத்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இந்தச் செயல்பாட்டில் சிவில் சமூக அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
கடந்த பல தசாப்தங்களில் நிகழ்ந்த சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களை ஆராய, சுயாதீன சிறப்பு குழுவுடன் ஒரு பிரத்யேக நீதித்துறை பொறிமுறையை அமைக்க எனது அறிக்கை பரிந்துரைக்கிறது. காவல் துறைக் காவலில் உயிரிழப்புகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்ந்து நிகழும் பிரச்சினைகளாக இருப்பதால், அவற்றைக் கையாள உடனடி மற்றும் நீடித்த நடவடிக்கைகள் தேவை. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குடிமைவெளி தொடர்பான சட்டச் சீர்திருத்தங்களும் அத்தியாவசியம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் உறுதியளித்தாலும், தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக் காவல்களில் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தச் சட்டத்தின் பயன்பாட்டிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். மேலும், அடிப்படை உரிமைகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை கட்டுப்படுத்தும் பிற சட்டங்கள் அல்லது முன்மொழியப்பட்ட சட்டங்கள் திருத்தப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வேண்டும் என்று எனது அறிக்கை வலியுறுத்துகிறது. இதில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கைச் சட்டம், வரைவு என்.ஜி.ஓ. மசோதா மற்றும் வரைவு தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அடங்கும்.
சிவில் சமூகத்திற்கான வெளி விரிவடைந்தபோதிலும், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள் மற்றும் சுயாதீன பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்புகளால் தொடர்ந்து மிரட்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனர் என்று எனது அறிக்கை விவரிக்கிறது. காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக்கூறலில் பணிபுரிபவர்கள், காணி தகராறுகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஈடுபட்டவர்கள் குறிப்பாக இலக்கு வைக்கப்படுகின்றனர். பாதுகாப்பு அமைப்புகளின் மனநிலையும் நடைமுறைகளும் மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை இது தெளிவாகக் காட்டுகிறது. வடக்கு மற்றும் கிழக்கின் இராணுவமயமாக்கலை குறைத்தல், காணிகளை மீள வழங்குதல் மற்றும் அனைத்து மட்டங்களிலும் அதிகாரப் பகிர்வு செய்வது உள்ளிட்ட விரிவான பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் அவசரத் தேவையாகும்.
திரு. ஜனாதிபதி, மூன்றாவதாக, பொருளாதார மற்றும் சமூக நீதி தொடர்பாக புதிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் வரவேற்கிறேன். வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், பல இலங்கையர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று எனது அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், வறுமை விகிதமும் உணவுப் பொருட்களின் விலையும் இரட்டிப்பாகியுள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி குன்றுதல் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. மலையக தமிழ் சமூகத்திற்கு ஆதரவு வழங்குவது முதன்மையானதாக இருக்க வேண்டும்.
இலங்கையின் கடன் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், வருவாயில் கிட்டத்தட்ட 60% வட்டி கொடுப்பனவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் இது அடுத்த பத்தாண்டுகளும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள புதிய சுங்கக் கட்டணங்கள், இலங்கையின் பொருளாதாரத்தின் அடித்தளமான ஆடைத் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தவும், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளை சமாளிக்கவும் அரசாங்கம் எடுத்த முயற்சிகளை எனது அறிக்கை வரவேற்கிறது.
இந்த மாற்றத்தின் அலை, அனைத்து நிதி மற்றும் பட்ஜெட் முடிவுகளும் மனித உரிமைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் ஒரு புதிய சமூக ஒப்பந்தத்திற்கும், மனித உரிமைகளை மையமாகக் கொண்ட பொருளாதார மாற்றத்திற்கும் அடித்தளமாக அமையும் என்று நம்புகிறேன். வெளிநாட்டு கடனாளிகள், இலங்கைக்கு அதன் மக்கள் மற்றும் அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளில் முதலீடு செய்ய தேவையான நிதி இடத்தை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
திரு. ஜனாதிபதி, எனது அலுவலகம், இந்தச் சபை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகள் மூலம் சர்வதேச அளவில் ஈடுபடுவது, இலங்கைக்கு மிகவும் அவசியமான மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும். இந்த பயணத்தில் இலங்கைக்கு உதவ எங்கள் அலுவலகம் தயாராக உள்ளது. சபையால் கட்டளையிடப்பட்ட எங்களின் பணிகளில் ஒன்றான இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் மூலம், 105,000-க்கும் மேற்பட்ட ஆதாரங்களைக் கொண்ட ஒரு பாதுகாப்பான களஞ்சியத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது சட்ட செயல்முறைகள், நீதி மற்றும் உண்மையை தேடுவதற்கான மிக முக்கியமான ஆதாரமாகும். இந்தப் பணிக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை உலகளாவிய அதிகார வரம்பிற்குள் விசாரிக்கவும், மனித உரிமை மீறல்களுக்கு நம்பத்தகுந்த வகையில் தொடர்புடையவர்களுக்கு எதிராக மேலும் தடைகள் விதிக்கவும் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெரும் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளுக்கும் மற்றும் பிற விசாரணைகளுக்கும் சர்வதேச உதவியை இலங்கை நாடுமாறு நான் ஊக்குவிக்கிறேன்.
சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து, தொடர்ச்சியான தண்டனையின்மை மற்றும் ஆழமான சமத்துவமின்மை எனும் இரட்டை அச்சுறுத்தல்களில் இருந்து இலங்கையர்களை பாதுகாக்க ஆதரவளிக்க முடியும். நன்றி.
The UN High Commissioner for Human Rights presented a major report on Sri Lanka to the Human Rights Council, stressing that the country has a “historic opportunity” to break free from cycles of violence and impunity that have persisted for decades. The report calls for accountability, justice, legal and institutional reforms, demilitarization of the north and east, protection of human rights defenders, and urgent measures to address the country’s deepening economic crisis. It also urges the international community to support investigations, universal jurisdiction cases, and sanctions against those credibly accused of grave human rights violations.
Below is the complete speech delivered by the UN High Commissioner for Human Rights:
Excellencies, Sri Lanka today has an historic opportunity to heal from the cycles of violence and impunity that have dominated for decades. The government has a clear mandate from across the nation for transformative reform, accountability, truth, and justice. During my recent visit, the country’s leadership pledged a fresh direction on long-standing issues. It is crucial for this approach to be translated into a coherent, timebound plan for concrete action.
The report I’m presenting today sets out key areas for focus, including delivering accountability and justice, fundamental legal and institutional reforms, and eliminating the discrimination and division that have poisoned politics for generations. Mr. President, excellencies, first and foremost, my report calls for decisive action by the government on justice and accountability which are essential to fostering a future of healing, reconciliation, and sustainable peace.
I welcome the government’s pledge to take action on major long-standing issues, including strengthening the rule of law and ending ethnic discrimination and the politics of division. During my visit, I witnessed the continued suffering of victims of human rights violations and abuses. At a mass grave site at Chami Chana Chmani, I met a family who were searching for and grieving the loss of a loved one. A woman from a southern province told me that after 30 years, she is still looking for her husband. Independent, transparent, and credible investigations are critical to restoring trust.
My report notes that conflict-related sexual violence remains deeply stigmatized and many survivors feel completely abandoned. Impunity can be a second form of violence that perpetuates cycles of harm. The demands of victims and survivors must be addressed. Their voices must guide the government’s policies on accountability, truth, justice, and reparation. This calls for a formal acknowledgement of violations and abuses, including during the civil war.
Victims and survivors need the state and its security forces to accept responsibility and recognize the lasting impact of violations and crimes committed by them alongside those committed by non-state armed groups such as the LTTE. There must be a shared sense of the facts and a shared conviction that justice is being served. I welcome the president’s statements in this regard and the increased space for memorialization by victims.
Second, there is an urgent need for Sri Lanka to undertake deep constitutional, legal, and institutional reforms. This is crucial to ensuring that the tragedies of the past can never be repeated. I welcome the government’s initiative to establish an independent public prosecution office with independent investigators. It is important for civil society organizations to be included in this process. My report recommends setting up a dedicated judicial mechanism with an independent special council to look into violations of international human rights and humanitarian law over previous decades.
I urge immediate and sustained action to address deaths in custody and torture which remain systemic issues. And I strongly encourage legislative reform in relation to counterterrorism and civic space. Despite the government’s commitment to repeal the Prevention of Terrorism Act, arbitrary arrests and detentions under the law continue. I urge the government to impose an immediate moratorium on the use of this act.
My report also calls for the amendment or repeal of other laws or proposed laws that restrict fundamental rights, civil and political rights. These include the Online Safety Act, the International Covenant on Civil and Political Rights Act, the draft NGO Bill, and the draft Personal Data Protection Act. Despite an increasingly open civic space, my report describes ongoing persistent patterns of intimidation and harassment by security agencies of human rights defenders, victims’ groups, and independent journalists.
People working on accountability for enforced disappearances and those working on land disputes and environmental issues are particular targets. This underlines the need to change the mindset and practice of security agencies. There is an urgent need for comprehensive security sector reform, including the demilitarization of the north and east, the return of land, and the devolution of power to all levels of governance.
Mr. President, third, I welcome the new government’s declared commitment to economic and social justice. My report notes that many Sri Lankans are enduring extreme hardship after the worst economic crisis in living memory. Both the poverty rate and food prices have almost doubled in the past five years. Malnutrition and childhood stunting have increased by almost a third. Support for the Malaiyaha Tamil community needs to be a priority.
Sri Lanka’s debt situation remains concerning. This year’s budget allocated almost 60% of revenue to interest payments which are expected to remain high for the next decade. The imposition of new tariffs by the United States will also have a serious impact on the clothing sector, a cornerstone of Sri Lanka’s economy. My report welcomes the government’s efforts to strengthen the social safety net and to tackle corruption and economic mismanagement.
I hope this wave of change can be the basis for a new social contract and a transition towards a human rights economy in which all financial and budgeting decisions take the protection of human rights into account. I also urge external creditors to provide Sri Lanka with the fiscal space it needs to invest in its people and their economic, social and cultural rights.
Mr. President, international engagement through my office, through this council and the human rights mechanisms can play an important part in the change Sri Lanka so desperately needs. My office stands ready to assist Sri Lanka on this journey. One example of our work mandated by the council is the Sri Lanka Accountability Project through which we have built a secure repository of over 105,000 items of evidence, a critical resource for legal processes, justice and truth-seeking. I call on all member states to support this work.
I also call on them to cooperate in investigating and prosecuting alleged perpetrators of international crimes committed in Sri Lanka under principles of universal jurisdiction and to explore further sanctions against people credibly accused of gross violations of human rights. I encourage Sri Lanka to seek international assistance with the exhumation of mass graves and other investigations.
Together, the international community can support Sri Lankans to escape from the twin threats posed by persistent impunity and deep inequality. Thank you.