SHARE
யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டு வந்த  முள்ளிவாய்க்கால் நினைவாலய கட்டுமானப்பணியை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து இடைநிறுத்தியுள்ளன.
இறுதி யுத்த முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவு கூறுவதற்கு நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர். இதன்படி பல்கலைக்கழக வளாக முன்றலில் அதனை அமைக்கும் பணிகளை கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர்.
எனினும் குறித்த இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்தால் தடங்கல் ஏற்பட்ட,பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தைகள்  இடம்பெற்றன

இதில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் குறித்த நினைவாலயத்தை அமைக்குமாறு உயர்மட்டத்தினரால் மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட, அதற்கு இணக்கம் தெரிவித்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவாலய பணிகளை தற்போதுள்ள நிலையுடன் இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது.

இதனையதூத்து மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த  முள்ளிவாய்க்கால் நினைவாலய கட்டுமானப்பணிகள் நேற்று மாலையுடன் இடைநிறுத்தப்பட்டது.

Print Friendly, PDF & Email