SHARE
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதி என விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதன் போதே சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும்  இவ் வழக்கு கோவைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டமா அதிபருக்கு நினைவூட்டல் கடிதமொன்றை அனுப்புவதாகவும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் , மாணவி படுகொலை வழக்கில் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருந்த கால பகுதியில் , பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு கொலை மிரட்டல் விடுத்தார் என பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலையே குறித்த நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email