SHARE

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன்இ பூநகரி முழங்காவில் பகுதி பாடசாலைகளுக்கு நேற்று முன்தினம் (23) கள ஆய்வுப்பணி பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இந்த கள ஆய்வுப்பணி மூலம் முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு தேவையான காணி தொடர்பான வியங்கள் ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டன.

இதன் போது காணி ஆணையாளரும் பூநகரி பிரதேச செயலகத்தின் காணிப்பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் காணி அதிகாரிகளும் அழைக்கப்பட்டு காணிப்பிரச்சினை தொடர்பான விளக்கங்கள் கோரப்பட்துடன் எதிர்காலத்தில் நீச்சல் தடாகம்இஉள்ளக விளையாட்டரங்குஇதொழிநுற்ப ஆய்வுகூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் பாடசாலைக்கு காணிகள் அவசியம் வேண்டும் என்ற விடயம் கருத்தில் கொள்ளப்பட்டு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 30 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தங்குவதற்கும் மேலதிக ஆசிரியர்கள் தங்கும் விடுதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை போர் காரணமாக இரணை தீவில் இருந்து இடம்பெயர்ந்து இரணைமாதா நகரில் இயங்கிக்கொண்டிருக்கும் இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் வித்தியாலயத்திற்கும் நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலைக்கும் சென்றிருந்த மேற்படி குழுவினர் அவ்விரு பாடசாலைகளுக்கும் தேவையான விடயங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இக்கள ஆய்வுப்பணி பயணத்தில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்இகிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர்இபூநகரிகோட்டக்கல்வி அதிகாரிஇ வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள்இபூநகரி பிரதேசசெயலக காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email