SHARE

நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவித்திட்டத்தில் இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கம், நமது ஈழநாடு உதவித்திட்டத்திடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க மாவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களைச் சேர்ந்த 100 சிறார்களுக்கு அவர்களின் கற்றல் தேவைகளுக்காக ரூபாய் 3 இலட்சத்து 40 ஆயிரம் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் செயற்பாட்டாளர்களான Suresh Perumal, Abinthan Subramaniam,Mareyanesan thanushath, Anojan Sivasithamparam, Thuraisingam Thuvarakan, Kasthuri Thurairaaja, Pavasuthan Uthaayaraja, Ratnasingam Jananan,Selvaraj Elanganathan,Sriskanthan,Sugan Vickneswaran & Ganeshalingam Ebinez ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email