SHARE

நமது ஈழநாடு வாழ்வாதரா உதவித்திட்டத்தில் இம்முறை வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாவீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களிற்கு அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான உதவித்தொகை என்பன வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நமது ஈழநாடிடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டின் அப்துல் ஷமீட் முஹமட் ஷஹீம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் கிரான் பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 37 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

அரசி, மா, சீனி பருப்பு உள்ளிட்ட அத்தியவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் மற்றும் மருத்துவ போக்குவரத்துக்கான உதவித் தொகையும் வழங்கிவைக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email