SHARE

நமது ஈழநாடு வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் இம்முறை வட்டக்கச்சி மாயவனூரைச் சேர்ந்த வாழ்வாதார உதவி தேவைப்படுபவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் Mohamed Fathima  அவர்களின் ரூபாய் 25 ஆயிரம் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

இலண்டனிலிருந்து நேரடியாக சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த Mohamed Fathima அவர்களினால் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திரனாளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

Print Friendly, PDF & Email