SHARE

நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவித்திட்டத்தில் இம்முறை புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

நமது ஈழநாடு உதவித்திட்டத்திடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் எற்பாட்டில் செயற்பாட்டாளர்களான முஹமட் இன்ரான் மற்றும் குகசோபனா நகுலேந்தன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது.

அந்தவகையில் இறுதிப்போரில் பாதிப்புக்குள்ளான தெரிவுசெய்யப்பட்ட 5 குடும்பங்களிற்கு தலா 10 ஆயிரம் ரூபா உதவித்தொகை கையளிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email