SHARE

நமது ஈழநாடு வாழ்வாதார உதவித்திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள போரினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத்குலசேகரத்தின் ஏற்பாட்டில் Mohamed Jameel Mohamed Minhaj மற்றும் அவரது மனைவி Fathima Sharmila ஆகியோரின் ஒரு இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது.

01.10.2023 அன்று கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தில் நடைபெற்ற உதவி வழங்கல் நிகழ்வில் மேற்படி தம்பதிகளினால மாணவர்களுக்கு நேரடியாக கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

Print Friendly, PDF & Email