SHARE

நமது ஈழநாடு வாழ்வாதர உதவித்திட்டத்தின் கீழ் இம்முறை முகமாலை, பொன்னகர் மற்றும் ஆனைவிழுந்தான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்ட்ட மொத்தம் 35 பாடசாலை மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் இன்று (30.04.2023) வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில் Mohamed Jameel Fathima Nilufa மற்றும் Shahul Hameed Riyasudeen Mohamed அவர்களின் ரூபாய் ஒரு இலட்சம் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

யுத்தத்தின் பின்னர் மாற்றுத்திறனாளிகளாக வாழ்க்கையை நடத்த போராடும் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Print Friendly, PDF & Email