SHARE
image_pdfPRINT

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் இன்று ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

மின் உயர்த்தியில் மேலே செல்லும் போது தவறி விழுந்தே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.