SHARE

தமிழின அழிப்பு நாளான மே18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான நிரந்த குழுவொன்றை அமைக்க தீர்மானித்துள்ள வடமாகாண சபை அக் குழுவில் உறுப்பினராக இணைய விரும்புவர்களுக்கான அழைப்பொன்றை விடுத்துள்ளது.

இதுகுறித்து முதலமைசர் சீ.வீ.விக்னேஸ்ரவன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

10வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி – 2019

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வருடந்தோறும் மே மாதம் 18ம் திகதி நினைவுபடுத்துவதற்காக நினைவேந்தல் நாளாக அத்தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தோம். அதற்காக இவ் வருடத்திற்கான வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம்.

இனிவருங்காலங்களில் சில வேளை வடமாகாணசபைக்கான தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரினும் அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்கவேண்டிவரினும்கூட இந்நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம்.

அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வு தொடர்ச்சியாக வருடந்தோறும் பரந்துபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ள ஆர்வமுள்ள பொது நிறுவனங்களை இக்குழுவில் நிறுவனத்திற்கு இருவர் என்ற ரீதியில் இணைத்துக் கொண்டு ஒரு குழுவை உருவாக்க எண்ணியுள்ளோம். மேலதிகமாக வேண்டுமெனில் தேவையான சில நபர்களையும் உள்ளடக்க உத்தேசித்துள்ளோம்.

இக்குழுவானது 2019ம் ஆண்டிலிருந்து சுயமாக இயங்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு அமையவிருக்கும் குழுவில் உறுப்பினராக இணைந்து கொள்ள விரும்பும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தகைமை சார்ந்த பொதுமக்கள் அவ்வாறு சேர்த்துக் கொள்ளக்கூடிய பெயர்களை தத்தமது கடிதத் தலைப்புக்களில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் ஒன்றை இதன் மூலம் விடுக்கின்றேன்.

அனுப்ப வேண்டிய முகவரி – ​கௌரவ முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்

​​​​​முதலமைச்சர் அலுவலகம்

வடமாகாணம்

​​​​கைதடி

குழு அங்கத்தவர் நியமனமானது உரியவாறு வெளிப்படையாக காலாகாலத்தில் நடைபெறும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

Print Friendly, PDF & Email