கனடா ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு இரு தமிழர்கள் தெரிவாகி வரலாறு படைத்துள்ளனர்.
கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42வது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர்.
விஜய் தணிகாசலமும் மற்றும் லோகன் கணபதி ஆகிய இருவருமே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட விஜய் 16,224 வாக்குகளையும் மார்க்கம் தோன்கில் தொகுதியில் போட்டியிட்ட லோகன் கணபதி 18943 வாக்குகளையும் பெற்றனர்.