ஆயுதங்களை தேடும் பணியின் பின்னணி; கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல்; கூடாரத்துக்குள் கத்தியுடன் புகுந்த நபர் தாக்க முயற்சி
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ருவிட்டரில் முதலிடம் பிடித்த #GoBackModi
இந்திய பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு தரப்பினர் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். மோடி, விமான நிலையத்தில் இறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டகாரர்கள் கைது
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளை சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கைதாகினர்.
மத்திய மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம் : வட மாகாண ஆளுநர் யார்?
நுண் கடன் வழங்குதலை தடுக்க முடியாமைக்கு அரசியல் பின்னணியே காரணம்- மகளிர் விவகார அமைச்சர் ஐயம்!
நுண் கடன்களை வழங்கி வரும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்று முழுதாக தடுத்து நிறுத்த முடியாமைக்கு அவற்றின் அரசியல் பின்னணியே காரணமாக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மீளவும் களத்தில் குதிக்கும் முதலமைச்சர்
(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)
மக்களின் நலன் கருதி அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து எதிர்வரும் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், சீ.வி.விக்னேஸ்வரன் கொள்கை ரீதியாக தம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் நிற்கலாம் என கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான தனது வாரமொரு கேள்வி பதிலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். ஆதன ஆரம்பகாலத்தில் அதனை உருவாக்க பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. வடகிழக்கு, தாயகம், இறைமை சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படை கூறுகளை ஜந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும்.
அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாணசபை தேர்தலில் நாம் மக்களிடம் வாக்கு கேட்டோம் மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்று தந்து என்னையும் முதலமைச்சர் ஆக்கினர்.
ஆனால் அதே கொள்கையுடன் தமிழத்தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கிறதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஓரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சுனாமியை தடுக்க கடலில் பூஜை; முல்லை கடலில் அமெரிக்க ஆய்வாளர்கள்
திட்டமிட்டு நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை நேரில் சென்று ஆராய்ந்த வடமாகாண சபை
தமிழன் கைக்குண்டு,அருள் எறிகணைகள் முல்லையில் மீட்பு; மிரளும் இராணுவம்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டு உள்ளது.
வவுனியா விசேட போலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தயாரிப்பான தமிழன் கைக்குண்டுகள் 22, அருள் எறிகணைகள் 34, உட்பட மைக்ரோ பிஸ்டல் ரவைகள் 3000, கைக்குண்டுகள் 34, மிதிவெடிகள் 48, ஆர்.பி.ஜி. குண்டுகள் 07, இ.ஜி.பி.எம்.ஜி. ரவைகள் 2000, விமான எதிர்ப்பு குண்டுகள் 1710, கிளைமோர்கள் 04, சி.04 வகை வெடிமருந்து 48 கிலோ என்பன மீட்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் இதில் விடுதலை புலிகளால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட தமிழன் கைக்குண்டுகள் மற்றும் அருள் எறிகணைகளை பார்வையிட்ட இராணுவத்தினர் அதன் தயாரிப்பு குறித்து வியந்துபோயுள்ளனர்.
1989 களில் இந்திய இராணுவத்தின் எதிர்த்தாக்குதலை முறியடிப்பதற்காக விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில் தயார் செய்யப்பட்டவையே அருள் எறிகணைகள் என தெரியவருகிறது.
சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணை
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்த சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த பிரேரணையை தோல்வியடைய செய்திருந்திருந்தனர்.
இந்நிலையிலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் குறி எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக திரும்பியுள்ளது.































