யாழ்ப்பாண மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று (11) காலை 9.30 மணிக்கு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமானது.
முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மங்கல வாத்திய இசையுடன் சபைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து முதல்வர் மற்றும் உறுப்பினர்களின் கன்னி உரைகள் இடம்பெற்றன.