யாழ்.பல்கலையின் அதிகாரசபை வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் வெளியீடு
கல்வி செலவை ஏற்றுள்ள யாழின் இலத்திரனியல் ஊடகம்
‘இனப்படுகொலை அரசின் தலைவரே வெளியேறு’ லண்டனில் மைத்திரிக்கு எதிராக போர்க்கொடி
யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் நினைவு உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு
பதில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே முறுகல்; செயலாளர்கள் மாற்றம் ஒத்திவைப்பு
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது.
விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு
உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள வீட்டு கிணற்றடியில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டு உள்ளன.
பிரித்தானியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குற்ற பிரித்தானிய வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாளை லண்டனில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
தமிழருக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சியிலும் அவை தொடர்வதை கண்டித்தும் ஜனாதிபதிக்கு எதிராக இவ் எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் Marlborough House, Pall Mall,London எனும் இடத்தில் மதியம் 13.00 மணிக்கு ஆரம்பமாகும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாய் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த பிரித்தானியா வாழ் அனைத்து தமிழ்த்தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளிலான பொதுநலவாய அரசதலைவர்களின் மாநாடு லண்டனில் நேற்று முன்தினம் (16) ஆரம்பமானது. ஏதிர்வரும் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுபீட்சம் பாதுகாப்பு நியாயம் பேண்தகுதன்மை ஆகிய அம்சங்களின் கீழ் பொதுநலவாய நாடுகளின் நோக்கங்களை அடைந்துகொள்வது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த உத்தியோக பூர்வ விஜயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய பிரதமர் தெரேசாமேயை சந்திக்கவுள்ளதுடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்
அள்ளிக்கொடுத்த கடல் அன்னை; ஒருநாளில் இலட்சாதிபதியான யாழ்.மீனவன்
யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன.
































