SHARE
image_pdfPRINT
ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நல்லூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டார்.
அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்டதாக பொலிஸார் மன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
“ஐயா நான் அன்றாடம் நுங்கு விற்றும் கூலி வேலை செய்தும் குடும்பத்தைப் பார்க்கிறவன். எனது நுங்கு விற்கும் இடத்துக்கு அருகே நின்ற முச்சக்கர வண்டிக்கு கீழே இருந்து சுருட்டு ஒன்றை பொலிஸார் எடுத்தனர். எனினும் அதனை ஹெரோயின் என்று சொல்லி என்னைக் கைது செய்துள்ளனர். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று சந்தேகநபர் மன்றில் தெரிவித்தார்.
வழக்கை ஆராய்ந்த பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேநபரை வரும் மே முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.