‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுக விழா
மாலை மேளதாள மரியாதையுடன் உங்களை அழைப்பரென எதிர்பார்க்காதீர்கள்
நினைவேந்தல் விவகாரம்; பணத்தை திருப்பி கேட்ட எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் பதிலடி
நினைவேந்தல் என்பது மரண வீட்டுக்கு செல்வது போன்றது. அங்கே மோள தாளத்துடன், மாலை போட்டு அழைத்து செல்லமாட்டார்கள். அதை நீங்கள் எதிர்பார்க்க கூடாது.
யாழில் வீதியோர மரத்தடியில் பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
நல்லூருக்கு அருகில் விரைவில் விகாரை!
(கார்டூன்-தீர்க்க தரிசன ஓவியர் அஸ்வின்)
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் திரும்பினார்
யாழ்.பல்கலையில் ஊடகத்துறை கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும்
-யாழ்.ஊடக அமையம்
ஊடகத்துறை சார்ந்த பெரும் ஆர்வம் கொண்ட, உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் அவர்தம் ஊடகத்தொழில்; ஆற்றும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என யாழ்.ஊடக அமையம் யாழ்.பல்கலைகழத்திடம் கோரியுள்ளது.
யாழ்.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கை மூலமே இக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது,
யுத்த அவலங்களின் மத்தியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்படவேண்டுமென்பது யாழ். ஊடக அமையம் நீண்ட கால கோரிக்கையாகும்.
தமிழ் ஊடகவியலாளர் விடயத்தில் முன்னைய ஆட்சியை போலவே நல்லாட்சியும்
செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழில் போராட்டம்
செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் நகரில் இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுப்பட்டது .
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்கள் க.விந்தன், சுகிர்தன், கஜதீபன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர்கள், மூத்த பத்திரிகையாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கனாமயில்நாதன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வைத்தியசாலை வீதியூடாகச் சென்று மீண்டும் அதே வீதியூடாக பேருந்து நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தடைந்தனர்.
“ஊடக குரலை நசுக்காதே – குற்றவாளிகளுக்கு தண்டனை கொடு, பொலிஸாரின் தாமதம் – வன்முறையாளரின் ஊக்கம் உள்ளிட்ட வாசகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆகியோரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்து. அதில் அந்தச் செய்தியாளர் படுகாயமடைந்திருத்தார்.
தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு
மக்களின் ஆரொக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவந்த தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் செப்புத் தொழிற்சாலையை மூடக்கோரி அமைதியான முறையில் போராடி வந்த மக்கள், அந்தப் போராட்டத்தின் நூறாவது நாளன்று மேற்கொண்ட ஊர்வலத்தின்மீது தமிழக போலிசாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைக் கண்டிக்கும் கவனயீர்ப்பு எதிர்வரும் 01.06.2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளது.
என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் சார்பாக அதன் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக் குறிப்பில் மன்னார் வளைகுடாக் கடல், நிலத்தடி நீர், காற்று ஆகிய இயற்கைச் சூழலைச் சீரழித்து, புற்றுநோய் போன்ற பாரதூரமான நோய்களை உருவாக்கி மக்கள் பலர் பலியாகவும், பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகவும் காரணமாக இருந்த, இந்த செப்பு ஆலையை மூட இருபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்த தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் எடுத்துத் தீர்வை வழங்காத இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் போராடிய மக்கள்மீது கடந்த வாரம் பெரும் வன்முறையைக் கட்டவிள்த்து விட்டுள்ளது. இதில் 13 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும், 100 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் உள்ளனர். இம் மக்கள் போராட்டங்களின் பின்னர் குறித்த ஸ்டெர்லைட் ஆலை சட்டவிரோதமானது எனக்கூறி அதைப் பூட்டியுள்ள அரசு, சரியானதும் சட்டரீதியானதுமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய மக்கள்மீது வன்முறையைக் கட்டவிள்த்து விட்டதோடு அல்லாமல், இப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நீதி விசாரணைகளையும் முன்னெடுக்கப்படாமை கண்டிக்கத்தக்கதாகும்.
எனவே, வேதாந்தா என்ற பெருமுதலாளிய நிறுவனத்தின் இலாப வெறிக்காக மக்களைப் பலிகொண்ட தமிழக அரசின் வன்செயல்களை எதிர்த்து இடம்பெறவுள்ள கவனயீர்ப்பில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரையும் அணிதிரளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு யூலை மாதம் நியமனம்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 57 ஆயிரம் பேருக்கும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் அரசு தனது தீர்மானத்தில் உறுதியாக உள்ளது.
ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. அதில் சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகள் சமுகமளித்தனர்.
இதன் இறுதி பெறுபேறுகள் அமைச்சுக்கு கிடைத்தன. கோரப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன கூறினார்.



























