SHARE
image_pdfPRINT

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் சுமார் 57 ஆயிரம் பேருக்கும் ஒரே தடவையில் அரச சேவைக்குள் இணைக்கப்படவேண்டும் என வலியுறுத்தி பட்டதாரிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் அரசு தனது தீர்மானத்தில் உறுதியாக உள்ளது.

ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. அதில் சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகள் சமுகமளித்தனர்.
இதன் இறுதி பெறுபேறுகள் அமைச்சுக்கு கிடைத்தன. கோரப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன கூறினார்.