SHARE

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் பரிதி [நடராசா மதீந்திரன்] நேற்றிரவு இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

உந்துருளியில் வந்த முகமூடி அணிந்த இருவர், கிழக்கு பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணியகத்துக்கு வெளியே, பரிதி மீது மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாரிஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கொலையாளிகளையும் தேடிவருகின்றனர்.

கடந்த ஆண்டு பரிதி கொலை முயற்சி ஒன்றில் இருந்து கத்திக்குத்துக் காயத்துடன் உயிர் தப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email