SHARE
image_pdfPRINT

சிறிலங்காவில் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் செயற்பாட்டு நிலைப் பணிகள் நிறுத்தப்படவுள்ளதாக, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அன்ரனியோ குரேரஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் 63வது நிறைவேற்றுக் குழுவில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும், இந்தியாவில் இருந்து சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பும் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளுக்கு, தொடர்ந்தும் உதவிகள் அளிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.