SHARE

விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதை இந்தியா விரும்பாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சிறிலங்கா அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அவர், மன்னார், பெரியமடுவில் இரண்டாவது கட்ட இந்திய வீடமைப்புத்திட்ட தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“இப்போது விடுதலைப் புலிகளின் மரபுரீதியாகப் போரிடும் பலம் முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டது.

சிறிலங்காவிலோ இந்தியாவிலோ விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதை இந்தியா விரும்பாது.

விடுதலைப் புலிகளால் இந்தியாவும் கூடப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் அவர்கள் ஒன்றிணைவதற்கு இந்தியா ஊக்கமளிக்காது.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email