SHARE
image_pdfPRINT

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதிகாரிகள் குழு அடுத்தமாதம் 14ம் நாள் சிறிலங்கா வரவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளை சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை நேரில் பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் இதுவரை கூறிவந்தது.

தற்போது, சிறிலங்கா அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுத்துள்ள நிலையிலேயே, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு அடுத்தமாதம் 14ம் நாள் கொழும்பு வரவுள்ளது.

இந்தக் குழுவினர் சிறிலங்காவின் வடக்குப் பகுதிகளுக்கு மட்டுமன்றி, தென்பகுதிக்கும் சென்று அங்குள்ள மனிதஉரிமைகள் நிலை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளனர்.