SHARE

வடமாகாணத்தில் கடந்த 2023 ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும்இ அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட பகுதிகளில் 14 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 44 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் இ 11 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 கொலை சம்பவங்களும் மன்னார் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4 கொலை சம்பவங்க ளும் வவுனியா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 8 கொலை சம்பவங்களும் முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 8 கொலை சம்பவங்க ளும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 13 கொலை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகளான போதில் வடக்கு கிழக்கில பெருமளவிலான இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலைகொண்டுள்ளனர். எனினும் தமிழர் வாழ் பகுதிகளில் தொடர்ந்தும் இவ்வாறு கொலைகள் இடம்பெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Print Friendly, PDF & Email