SHARE

ஜெனிற்றாவின் கைதுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

கைதுகள் மூலம் அப்பட்டமான சனநாயகப் படு கொலைகளை தொடர்ந்தும் சிறிலங்கா அரசு அரங்கேற்றி வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வடக்கு விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்று திரண்டு வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்பட்ட போது தலைவி ஜெனிற்றாவும் அங்கு நடப்பவற்றை படம் எடுத்துக்கொண்டிருந்த யுவதி ஒருவரும் பொலிசாரால் மிகவும் வன்முறையாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த கைது குறித்து இன்று (11) வெளியிட்டுள்ள கண்ட அறிக்கையிலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அறவழியில் போராடிய ஜெனிற்றா அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையினை மாணவ சமுதாயமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டிப்பதோடு அப்பட்டமான சனநாயக உரிமை மீறலாகவும் இதனை பதிவு செய்கின்றது.

மேலும் அனைத்து சமூகத்தின் முன்னாள் சனநாயக உரிமைகள் வழங்கப்படுவதாக ஒரு போர்வையை போர்த்திக்கொண்டு அறவழியில் போராடிய மக்களின் உரிமைகளை பொருட்படுத்தாது கைதுகள் விசாரணைகள் மூலமாக அடக்கியொடுக்குவதற்கு முயலும் சிறிலங்கா அரசின் போக்குகள் உலக அரங்கின் முன்னாள் வெளிச்சமாக்கப்பட வேண்டியவையாகும் என குறிப்படப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email