SHARE
image_pdfPRINT

பாதிக்கப்பட்டோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டோனா (Siobhain McDonagh MP) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிற்றாவின் கைதுக்கு தனது கண்டணத்தை வெளிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வடக்கு விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்று திரண்டு வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முற்பட்ட போது தலைவி ஜெனிற்றாவும் அங்கு நடப்பவற்றை படம் எடுத்துக்கொண்டிருந்த யுவதி ஒருவரும் பொலிசாரால் மிகவும் வன்முறையாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கைக்கு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரித்தானியா அனைத்துகட்சி பாராளுமன்ற குழுவின் சிரேஷ்ட உறுப்பினருரும் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான சிவோன் மக்டோனா பாதிக்கப்பட்டோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

அதே வேளை இது குறித்து நேற்றைய தினம் பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிற் கேமரூன் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சிவானந்தன் ஜெனிற்றாவின் கைது நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் எனவும் அமைதியாக போராட்டம் மேற்கொண்ட போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் போரின் இறுதிக் காலத்தில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர். மேலும் ஐக்கிய நாடுகளின் சபையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணை குழு தமது 2020 அறிக்கையில் இலங்கை காணாமல் ஆக்கப்படுவோரின் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிப்பதாக சுட்டி காட்டினார்.

எனவே டேவிற் கேமரோன் அவர்களை கண்டனத்தை தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்வதுடன் பிரித்தானியா ஓரு தூதுவரை அந்த வழக்கு விசாரணைக்கு நிதிமன்றுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொண்டார்.