SHARE
image_pdfPRINT

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியினால், பிரதமர் ரணில் விக்ரசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.