SHARE

தற்காலிக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இன்று முற்பகல் இடிந்து வீழ்ந்துள்ளது . இதன் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான் நகர் பகுதியிலேயே குறித்த அனர்த்தம் இன்று முற்பகல்11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், வைதியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

8 வயதான நிரோயன் றுசாந்தன் என்ற சிறுவனே பலியாகியுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த பகுதியில் வெள்ள நீர் தேங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வருடம் தோறும் 40 குடும்பங்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Print Friendly, PDF & Email