SHARE

இன்று வெளியாகியுள்ள நமது ஈழநாடு மின்னிதழ் பத்திரிகைக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தரம் பரமாச்சாரிய சுவாமிகள் ஆசிச்செய்தி வழங்கியள்ளார்

தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களின் ஒன்றான நமது ஈழநாடு நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் பத்திரிகை வடிவில் மின்னிதழ் மூலமாக இன்று வெளியானது. இரத்தக்கறை மாறாத கறுப்பு ஜூலை சிறப்பு மலருடன் வெளியாகி தொடர்ந்து மாதம் ஒரு முறை வெளிவரவுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த நமது ஈழநாடு மின்னதழ் பத்திரிகைக்கு தனது ஆசி செய்தியை வழங்கியுள்ளார்.

அதில் அவர் இன்றைய கால சூழ்நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளிற்கு ஏற்ப நமது ஈழநாடு பத்திரிகை மீண்டும் புதிய வடிவில் வெளிவருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப அவர்களின் எதிர்பார்ப்புக்களை உலகறிய எடுத்துகூறும் வகையில் பத்திரிகை தர்மத்தோடு தொடர்ந்து வெளிவர வேண்டுமென இறையருளை வேண்டி ஆசி வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email