SHARE

இன்று வெளியாகியுள்ள நமது ஈழநாடு மின்னிதழ் பத்திரிகைக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ அவர்கள் ஆசிச்செய்தி வழங்கியள்ளார்

தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களின் ஒன்றான நமது ஈழநாடு நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் பத்திரிகை வடிவில் மின்னிதழ் மூலமாக இன்று வெளியானது. இரத்தக்கறை மாறாத கறுப்பு ஜூலை சிறப்பு மலருடன் வெளியாகி தொடர்ந்து மாதம் ஒரு முறை வெளிவரவுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த நமது ஈழநாடு மின்னதழ் பத்திரிகைக்கு மன்னார் ஆயார் ஆசிச்செய்தி வழங்கியுள்ளார்.

அதில் தமிழ் மக்கள் மனம் நிறைந்த பத்திரிகையாக வலம் வந்த நமது ஈழநாடு எமது உரிமைக்குரலாக தமிழ் உணர்வின் வழிநின்று நீதியோடு குரல் எழுப்பி தனித்துவத்தோடு திகழ்ந்ததை யாரும் மறுக்கமுடியாது. எனினும் பத்திரிகைக்கு பல தடைகள் ஏற்பட்ட போதிலும்; தற்போது எவ்வித விட்டுக்கொடுப்பும் பின்வாங்குதலும் இல்லாமல் அதே போக்கோடும் வீச்சோடும் மாற்று வழியில் இணையப்பத்திரிகையாக நமது ஈழநாடு வெளிவருவதை எண்ணி மனமகிழ்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email