SHARE

இந்தியாவின் பிரபல பரதநாட்டியக்கலைஞர் கலைமாமணி,நிருத்திய சூடாமணி,நாட்டிய இளவரசி ஸ்ரீமதி ஊர்மிளா சத்தியநாராயணன் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்து வழங்கும் பரதநாட்டிய நடன அளிக்கை யாழில். நடைபெறவுள்ளது.

யாழ்.நல்லூர் சங்கிலியன் தோப்பில் நாளை புதன்கிழமை 05ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் குறித்த நடன அளிக்கை நடைபெறவுள்ளது.
யாழ்.இந்திய துணைத்தூதரகம் , இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேராயம் , மற்றும் வடமாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து தெய்வீக சுகானுபவம் -7 எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
அதேவேளை இக் குழுவினர் நாளை மறுதினம் வியாழக்கிழமை 06 ஆம் திகதி வவுனியா நகர சபை மண்டபத்தில் காலை 10 மணிக்கு பாரத நாட்டிய பயிற்சி பட்டறையை நடாத்த உள்ளதுடன் , மாலை 4.30 மணிக்கு நகர சபை மண்டபத்தில் நடன அளிக்கையையும் வழங்கவுள்ளனர்.
Print Friendly, PDF & Email