SHARE

நல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் (காஸ் சிலிண்டர்) வெடித்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

நல்லூர் ஆலய சூழலில் அமைந்துள்ள கடை ஒன்றினுள் இருந்த எரிவாயு கொள்கலன் (காஸ் சிலிண்டர்) திடீரென இன்று  செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணியளவில் வெடித்து சிதறியது. அதன போதே இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் ஆலய சூழலில் முதலுதவி செயற்பாடுகளுக்காக தரித்து நின்ற நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) மூலம் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்
Print Friendly, PDF & Email