SHARE

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த வேளை மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை மிதிவெடி அகற்றும் பணியில் மிதிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்த வேளையே இந்த அனர்த்தம் ஏற்பட்டு உள்ளது.
அதன் போது கிளிநொச்சி பரவிப்பாஞ்சனை சேர்ந்த பி.திலீபன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Print Friendly, PDF & Email