யாழ்.போதனா வைத்திய சாலையில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்துள்ளார்.
காரைநகர் களபூமி பகுதியை சேர்ந்த இந்திரன் சிவகலா (வயது 21) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த பெண் பிரசவத்திற்காக கடந்த 16ஆம் திகதி காரைநகர் வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டார். பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
அந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை கடந்த சனிக்கிழமை பிரசவித்தார்.
குழந்தை பிரசவித்து ஒரு சில மணி நேரத்தில் தாயார் உயிரிழந்தார். சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட உயர் குருதி அமுக்கம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டது என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்.போதனா வைத்திய சாலை திடீர்மரண விசாரணை அதிகாரி ந,பிரேம்குமார் மேற்கொண்டு இருந்தார்.