SHARE

யாழில்.திடீரென மயங்கி விழுந்த மூவர் உயிரிழந்துள்ளனர். கொக்குவில் , பலாலி , சங்கானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

கொக்குவில் கிழக்கை சேர்ந்த கார்த்திகேசு கதிர்காமத்தம்பி (வயது 60) என்பவர் வீட்டில் பாக்கு இடித்துக்கொண்டு இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உறவினர்கள் அவரை உடனே யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்து சென்றனர். இருந்த போதிலும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

பலாலியை சேர்ந்த குணசீலன் குயின்சன் (வயது 30) எனும் இளைஞன் வீட்டில் நேற்றுக்காலை பிட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளை திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக உறவினர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பெரிய தம்பம் பகுதியை சேர்ந்த இராமன் இராசதுரை (வயது 60) என்பவர் சங்கானை பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் சங்கானை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த இவர் சங்கானையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். சங்கானை தொட்டிலடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி நின்று விட்டு மீண்டும் மன்னார் செல்வதற்காக பேருந்துக்காக தொட்டிலடி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அதன் போது திடீரென மயக்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சங்கானை வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார்

Print Friendly, PDF & Email