SHARE

“சட்டம் மற்றும் நீதிக்கு கீழ்படிகின்ற அனைத்து கல்விச் சேவை உத்தியோகத்தர்களும் தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்டு நாளை பணிக்குச் செல்லவேண்டும். பாடசாலைகள் நாளை திறக்கப்படும்” என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் ஆசிரியர்கள், அதிபர்கள் உள்பட அனைத்து கல்விச் சேவை உத்தியோகத்தர்களும் நாளை சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடுவர் என இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று மாலை அறிவித்தது.

அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

Print Friendly, PDF & Email