SHARE

பாலியல் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜினாவிற்கு நீதி கோரி நாளை வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்குமாறு அப்பகுதி மக்களும் சமூகமட்ட அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

மாணவியின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் சுழிபுரம் சந்நியில் மாணவர்களும் பொது அமைப்புக்களும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையிலையே நாளையதினம் வட மாகாணம் தழுவிய ரீதியில் கதவடைப்பு போராட்டமொன்றுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கங்கள், சமூகமட்ட அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மாணவி றெஜினாவின் படுகொலைக்கு நீதி கோருவதுடன் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இப்போராட்டத்திற்கு தாங்கள் அழைப்பு விடுப்பதாக சமூகமட்ட அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

Print Friendly, PDF & Email