SHARE

மட்டக்களப்பு, வாழைச்சேனை நாசீவன் தீவு கிராமத்தின் காட்டுமுறி பாலத்திற்கு அருகாமையிலுள்ள கண்ணமரக் காட்டுக்குள் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் உருக்குலைந்த நடலம் மீட்டக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் குறித்த கண்ணமரக் காட்டுக்குள்ளிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதினை அப்பகுதிக்கு சென்றபோது அங்கு ஆண் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டனர்.

இதனையடுத்து பிரதேச கிராம அபிவிருத்தி சங்கத்தலைவருக்கு தகவல் வழங்கியதனையடுத்து கிராமசேகவர் இது தொடர்பாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

சடலத்தின் அருகில் கைத்தொலைபேசி ஒன்று காணப்பட்டதுடன் உயிரிழந்துள்ளவர் நீல நிற டெனிம் காற்சட்டையும் கறுப்பு நிற ரீ சேட்டுட் அணிந்திருந்துள்ளார் உன தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித் சடலத்தை அங்கிருந்து மீட்டுள்ள பொலிசார் தாம் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email