SHARE
image_pdfPRINT

‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, கொடி மற்றும் கிளைமோர் குண்டு என்பனவற்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டது. சம்பவத்தையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இருவர் தப்பிஓடிவிட்டனர்’ என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் கூறினர்.

‘ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட முற்பட்ட போது, சாரதியும் மற்றொருவரும் அதிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது, அதற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோ எடையுடைய கிளைமோர் என்பன மீட்கப்பட்டன.

தப்பித்த இருவரையும் கைது செய்வதற்கான தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்