SHARE

மல்லாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை அடுத்து 40 பேரை இலக்கு வைத்து பொலிசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குழு மோதல் இடம்பெற்றது. அதன் போது மோதலை தவிர்க்க சென்ற பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஆரம்ப விசாரணைகளின் அடிப்டையில் அன்றைய தினம் தேவாலயத்திற்கு முன்பாக சுமார் 40 பேர் இரண்டு குழுக்களாக மோதிக்கொண்டனர் என தெரியவந்துள்ளது. 

அதன் அடிப்படையில் அன்றைய தினம் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email