SHARE

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்தமையை அடுத்து தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்தார்கள் எனும் குற்ற சாட்டில் கைது செய்யபட்ட மூன்று இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றசாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று இளைஞர்களை தெல்லிப்பளை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் இல்லத்தில் முற்படுத்தப்பட்டனர்.

குறித்த மூன்று இளைஞர்களையும் பிணையில் விடுவிக்க பொலிசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை அடுத்து மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Print Friendly, PDF & Email