இந்துமத விவகார பிரதி அமைச்சராக
இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
அரசாங்கத்தினால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையினால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புக்கள், இந்து சமய பெரியவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.