SHARE
image_pdfPRINT

தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மன்னார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் காணாமல் போயிருந்தனர். அத்துடன் அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியிருந்தது.

இந்த நிலையில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.