SHARE

வவுனியாவில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தக் குழந்தையை மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.

வவுனியா குட்செட் வீதி 1ம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையொன்றை கடத்தி சென்றுள்ளனர்.

வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலே குழந்தையை கடத்தி சென்றது.

குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதுடன் தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் விசாரணையில் தெரிவித்திருந்தார்.

விரைவாக செயற்பட்ட பொலிஸார் மோப்ப நாய் கொண்டு தேடுதலையும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் குழந்தை இன்று புதுக்குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email