SHARE

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சமாக உள்ள மாவட்டங்கள் என இலங்கை நோய்தொற்றியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் நோய்த்தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம்இ திருகோணமலைஇ கொழும்புஇ மட்டக்களப்புஇ கம்பஹாஇ மாத்தறைஇ இரத்தினபுரிஇ கண்டிஇ கேகாலைஇ காலிஇ களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய 12 மாவட்டங்களில் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து அதி உச்சம் கொண்ட மாவட்டங்களாக 2016இ 2017 மற்றும் 2018 முதல் 5 மாதங்களின் புள்ளிவிபரங்களின் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டைஇ புத்தளம்இ பதுளைஇ கல்முனைஇ அநுராதபுரம் மொனாரகலஇ பொலன்நறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் டெங்கு நோய்த் தொற்று ஆபத்து உச்சமாக உள்ள மாவட்டங்களாக உள்ளன.

கிளிநொச்சி> முல்லைத்தீவு> மன்னார்> அம்பாறை> வவுனியா மற்றும் நுவரேலியா ஆகிய மாவட்டங்கள் டெங்கு தொற்று சராசரியாக காணப்படும் மாவட்டங்களாக உள்ளன.
2017ஆம் ஆண்டைவிட 2018ஆம் ஆண்டு முதல் 5 மாதங்களிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது – என்றுள்ளது.

Print Friendly, PDF & Email