வட்டுக்கோட்டை பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த வேலுப்பிள்ளைப்பிள்ளை மகேந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவர்.
கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
வட்டுக்கோட்டை மாவடி சந்தியில் உள்ள கடையில் பொருட்களை கொள்வனவு செய்த பின்னர் பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் முதியவருடன் மோதி விபத்துக்குள்ளானர்.
விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதான வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பயனின்றி முதியவர் உயிரிழந்தார்.