SHARE
புதிய வகை கைத்தொலை பேசியை வாங்குவதற்கு தாயிடம் பணம் கேட்ட மகனுக்கு, பொருளாதார நிலை காரணமாக தாயாரால் பணம் வழங்க முடியாது போக தவறான முடிவெடுத்த மகன் தற்கொலை செய்துள்ளார் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்வேலி தெற்கை சேர்ந்த கிருஷ்ணலிங்கம் கோபு (வயது-17) எனும்,  பாடசாலை மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,
குறித்த மாணவன், கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.
கடந்த 25 ஆம் திகதி தாயிடம் புதிய வகை கைத்தொலைபேசி வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். பொருளாதார நிலை காரணமாக தாயாரால் பணம் வழங்க முடியாது போயுள்ளது.
அந்நிலையிலையே மாணவன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளான் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நீர்வேலியில் கடந்த இரண்டு மாதத்திற்குள் நீர்வேலி வடக்கு, தெற்கு கரந்தன் வீதியில் அருகருகே வசிக்கும்  3 பேர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email