SHARE
யாழ்.நாவாந்துறை பகுதியில் இருந்து நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாவாந்துறையை சேர்ந்த ஜோன் மல்கன் விமல்(வயது 44) , செபமாலை அலெக்ஸ் (வயது 35) , மகேந்திரன் ரூபன் (வயது 30) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்,
குறித்த மூன்று மீனவர்களும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை நாவாந்துறையில் இருந்து நெடுந்தீவு கடற்பரப்புக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
அந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீனவர்களில் ஒருவரான ஜோன் தனது மனைவிக்கு , தமது படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது என தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர்களுடனான தொடர்பு அற்ற நிலையில் , உறவினர்களால், கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் யாழ். பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டதை  அடுத்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Print Friendly, PDF & Email